5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
T20 World Cup 2024

T20 World Cup 2024

2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 9வது ஆண்டாக நடக்கவுள்ளது. இது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியாகும். இந்த போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்துகிறது. இந்த வருடத்துக்கான டி20 போட்டொ2024 ஜூன் 1 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது. இந்த டி20 உலகக் கோப்பைக்கு, தகுதி பெறும் 20அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த கட்டத்தில், தகுதி பெறும் அணிகள் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும், இதில் இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இருக்கும்.

Read More

Mohammedsiraj: இந்திய வீரர் முகமது சிராஜிற்கு அரசுப்பணி, வீடு வழங்கப்படும் – தெலுங்கான முதல்வர் உறுதி

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மா தலைமைகளான இந்திய அணி 17 வருடத்திற்கு பிறகு உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. டி20 உலக கோப்பையை வென்ற அணி இடம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிற்கு அரசு வேலை மற்றும் வீடு வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

BCCI: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்களுக்கு 125 கோடி பரிசு..? யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?

உலக கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு வென்று சாதனைப்படைத்த இந்திய அணிக்கு 125 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்தது. ஐசிசி அறிவித்த மொத்த பரிசுத்தொகையை காட்டிலும் 4 மடங்கு அதிகமாக வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் விமர்சங்கள் எழுந்தன. இதில் யார் யாருக்கு எவ்வளவு என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரங்களை காணலாம்.

Hardik Pandiya: ரசிகர்களுக்கு மனப்பூர்வமாக நன்று தெரிவித்த ஹர்திக்..!

டி20 உலக கோப்பையை வென்று இந்தியா திரும்பிய கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள், மும்பையில் உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் காட்டிய அன்பிற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவின் தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், தற்போது வைரலாகி வருகிறது. 

Team India Parade: வான்கடே மைதானம் நோக்கி ஊர்வலமாக சென்ற வீரர்கள்.. கொட்டும் மழையில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள், மும்பையில் வெற்றி ஊர்வலம் செல்வதற்கு பிசிசிஐ சிறப்பு ஏறபாடுகளை செய்து வந்தது. மேலும், பிரேத்யகமாக வடிவமைக்கப்பட்ட ஏசி பேருந்தில் வான்கடே மைதானத்தை நோக்கி சென்றனர். வழிநெடுகிலும், இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

World Cup Winning Team: நாளை இந்தியா திரும்பும் கிரிக்கெட் வீரர்கள்…!

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், நாளை இரவு 7 மணி அளவில் டெல்லி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற பார்படோஸ் அருகே புயல் காரணமாக இந்திய அணி வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் எழுந்தது. தற்போது அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதால் இன்ரு மாலை இந்தியா புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Indian Team: உலக கோப்பையை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் சிக்கல்..!

டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் வீரர்கள் இன்று நாடு திரும்புவதாக கூறப்பட்ட நிலையில், பார்படாஸில் கடுமையான சூறாவளி வீசி வருவதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், நாடு திரும்புவதில் சிக்கல் உருவாகியுள்ளது. இந்திய வீரர்கள் பார்படாஸ் ஹோட்டல்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

BCCI Prize Money: டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு – பிசிசிஐ அதிரடி

2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பையை சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ரூ. 125 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு ஏற்கனவே ஐசிசி இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.20 கோடியே 42 லட்ச ரூபாயை இந்திய அணி பரிசுத்தொகையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rohit Sharma: டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா படைத்துள்ள சாதனைகள்..!

இந்தியா டி20 உலகக் கோப்பையை 2 முறை கைப்பற்றிய நிலையில், 2007 ஆம் ஆண்டு அணியில் அங்கம் வகிக்கும் வீரராகவும், 2024 ஆம் ஆண்டு அணியை வழிநடத்தும் கேப்டனாகவும் இருந்துள்ளார். 2 முறை கோப்பையை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றார்.

T20 World Cup: நிறைவான இதயத்துடன் விடைபெறுகிறேன்.. டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு..!

Jadeja Retirement: இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து இந்திய நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  உலக கோப்பையை வென்ற கையோடு முக்கிய வீரர்கள் சர்வதேச  டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜடேஜாவின் சமூக வலைதளத்தின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Hardik Pandiya: இது கனவல்ல.. நிஜம் தான்.. நாம் உலக கோப்பையை வென்றுவிட்டோம் -ஹர்திக் பாண்டியா உருக்கம்

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலக கோப்பை தொடரில் ப்ளேயிங் லெவனில் இடம்பெற்ற சிலர் வீரர்களை தவிர்த்து, மற்ற வீரர்கள் அனைவரும் மிகவும் பொறுப்புடன் விளையாடினர். இந்த சீசன் முழுவதும் இந்தியா பல போட்டிகளில் வெல்ல முக்கிய காரணமாக ஹர்திக் பாண்டியா இருந்துள்ளார்.

T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி… வாழ்த்தும் பிரபலங்கள்!

T20 World Cup: 2007ல் நடந்த முதலாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது ரோகித் தலைமையில் இந்தியா 2வது முறையாக டி20 உலக கோப்பையை கைபற்றி அசத்தியது. இந்த நிலையில், உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு  வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

Virat Kohli Retirement: சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கிங் கோலி..!

IND vs SA: ரோகித் சர்மா தலையிலான இந்திய அணி, நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை 17 வருடங்களுக்கு வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில், 76 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்ற விராட்கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆட்டநாயகன் விருதைபெற்ற விராட்கோலி இதுவே தனது கடைசி சர்வதேச டி20 போட்டி என அவர் அறிவித்துள்ள நிலையில், கோலியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

T20 World Cup Final: விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கிறார் – கேப்டன் ரோகித் கருத்து

விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன். அவரது அதிரடியான ஆட்டத்திறன் இன்னும் அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும். இதையெல்லாம், இறுதிப்போட்டிக்காக விராட் கோலி பாதுகாத்து வைத்திருக்கிறார் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

IND vs ENG: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 17 வருடங்களுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய அணி, முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது. 

T20 World Cup: எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் – ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை எப்போதும் மறக்க முடியாது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நன்றாக விளையாடினார்கள். எங்களை நினைத்து பெருமை கொள்கிறேன். எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை தற்போது பிறந்துள்ளது. நாங்கள் எங்களை மேலும் வலுவாக கட்டமைத்துக்கொண்டு மீண்டும் அதிக பலத்துடன் திரும்புவோம், எங்களுக்கு ஆதவளித்த அனைவரும் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் நன்றி தெரிவித்துள்ளார்