5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
PM Modi

PM Modi

இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி, 1971ல் குஜராத்தில் ஆர்எஸ்எஸ்-ன் முழு நேரப் பணியாளராக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் ஆர்எஸ்எஸ் டூ பாஜக என அரசியல் நகர்வுகளை கண்ட அவர், 2001 ஆம் ஆண்டு வரை கட்சிப் படிநிலையில் பல பதவிகளை வகித்து, பொதுச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்ந்தார் . பின்னர்
2001 இல், மோடி குஜராத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 2 முறை இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து வெற்றி பெற்றார் மோடி. தற்போது 3வது முறையாக பிரதமர் வேட்பாளராகவும் அவர் களமிறக்கப்பட்டுள்ளார்

Read More

PM Modi Russia Visit: 3 நாள் வெளிநாட்டு பயணம்.. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை.. முழு விவரம்..

பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாஸ்கோவிற்கு செல்கிறார். மாஸ்கோ சென்றடைந்த பின் பிரதமர் மோடி, அதிபர் விளாடிமிர் புதினுடன் தனிப்பட்ட விருந்தில் பங்கேற்க உள்ளார். அதன்பின் இருநாட்டு தலைவர்களும், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களால் பரஸ்பர நலன்கள் பற்றி பேசுவார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

India Team: 17 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற இந்திய அணி.. வீரர்களுடன் கலந்துரையாடி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..

இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு விருந்து தொடங்கியது. அதன்படி, உலக கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணியில் இடம்பெற்று இருந்த வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விருந்தில் கலந்துகொண்டனர்.

மாநிலங்களவையில் மணிப்பூர் குறித்து வாய் திறந்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், நேற்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிலையில், இன்று மாநிலங்களவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மோடி உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையான மணிப்பூரில் இனக்கலவரம் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

PM Modi: “ரிமோட் கண்ட்ரோல் அரசு” மாநிலங்களவையில் சோனியா காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்திய ஜனநாயகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து ஒரு அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைப்பது ஒரு அசாதாரண நிகழ்வு. ஆனால் எதிர்க்கட்சிகள் அதன் முக்கியத்துவத்தை வேண்டுமென்றே புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் பெரும் சத்தத்தை உருவாக்கி நாட்டு மக்களின் இந்த முக்கிய முடிவை மறைக்க முயல்கின்றனர். மக்கள் முழு மனதுடன் ஆதரவளித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு.. காரணம் என்ன?

வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்க வரும் 20ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தர இருந்தார். ஆனால், தற்போது அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகைக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் கரு.நாகராஜ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு மோடி வரவிருந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றியது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை சந்தித்தன. தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி எட்டு முறை வருகை தந்தும் அதற்கு பலன் கிடைக்கவில்லை என்றே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர்.

G7 summit: ஜி7 நாடுகள் மாநாடு.. இன்று இத்தாலி செல்லும் பிரதமர் மோடி

Narendra Modi : மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, கூட்டணி கட்சிகளுடன் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் தங்களது பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்ல உள்ளார்.

  • CMDoss
  • Updated on: Jun 13, 2024
  • 09:20 am

PM Modi Swearing-in Ceremony Highlights: பிரதமர் மோடி பதவியேற்பு.. நடந்தது என்ன? முழு விவரம்!

Central Government Formation highlights Updates in Tamil : குடியரசு தலைவர் மாளிகை மற்றும் பதவியேற்பு விழா நடைபெறும் கர்தவ்யா பாத் ஆகியவற்றில் முதல் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருந்தினர்கள் தங்கும் இடங்களை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய டெல்லியை சுற்றிலும் மூன்றாவது அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு கட்டுப்பாடு அறைகள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து இடங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

  • CMDoss
  • Updated on: Jun 9, 2024
  • 22:12 pm

PM Modi : ஜூன் 9ம் தேதி பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி.. ஏற்பாடுகள் தீவிரம்!

Narendra Modi : 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். நேற்றே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவைய கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார். இந்நிலையில் நாளை குடியரசுத்தலைவரை மோடி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

  • CMDoss
  • Updated on: Jun 6, 2024
  • 17:27 pm

Narendra Modi : ஒருமனதாக தேர்வான நரேந்திர மோடி.. 8ம் தேதி பிரதமராக பதவியேற்பு என தகவல்

PM Modi : 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். நேற்றே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவைய கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார். இந்நிலையில் நாளை குடியரசுத்தலைவரை மோடி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அதன்படி ஜூன்8ம் தேதி பதவியேற்பு இருக்கும் என தெரிகிறது.

  • CMDoss
  • Updated on: Jun 6, 2024
  • 08:55 am

குமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி!

PM Modi: இன்று 3 மணியளவில், தனது 45 மணி நேர தியானத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். அங்கு தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் துறை அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். மேலும், அங்குள்ள பணியாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

PM Modi in Kanniyakumari: கன்னியாகுமரிக்கு இன்று தியானம் செய்ய வரும் பிரதமர் மோடி.. உச்சக்கட்ட பாதுகாப்பு!

பிரதமர் மோடியின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி சரகடிஐஜி பிரவேஷ்குமார் தலைமையில் 8 எஸ்பிக்கள் அடங்கிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கடற்படையினர், கடலோர காவல் படையினரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவும், சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும் இன்று முதல் 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கன்னியாகுமரி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

”இங்க யாரும் ஸ்பெஷல் கிடையாது” இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி கருத்து!

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த மோடி, "சிறுபான்மையினருக்கு எதிராக நான் பேசியதே இல்லை" என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து விரிவாக பேசுகையில், "சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக தான் நான் பேசுகிறேன். அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் குறித்து பேசுகிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பயோ பிக் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் சத்யராஜ் விளக்கம்!

Actor Sathyaraj: விழாவில், சத்யராஜ் பேசும்போது கூறியதாவது, சினிமா, எதிர்காலத்தை நோக்கி வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் குகன் போன்ற கற்பனை வளம் கொண்டர்கள் அதை எடுத்து செல்வதற்கு முக்கியம். சில படங்கள் நடிகர்களை வைத்து வெற்றி பெறும். சில கதை, வசனத்தை வைத்து வெற்றி பெறும். இன்று படங்களின் வெற்றிக்கு டெக்னிக்கல் விஷயங்களும் முக்கியமாக இருக்கின்றன என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியிடம் வேட்புமனு பெற்ற ஆட்சியர் தமிழ்நாட்டு காரரா? அடடே செம்ம!

தென்காசியைச் சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் என்பவர் பிரதமர் மோடியின் வேட்பு மனுவை பெற்றிருக்கிறார்.

Narendra Modi : சொந்தமாக கார், வீடு இல்லை..பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு?

PM Modi Assets: தனக்கு ரூ.3 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.