5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

CM Stalin: ஆம்ஸ்ட்ராங் படுகொலை… காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு உத்தரவு!

தமிழக பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாக கைது செய்திருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

CM Stalin: ஆம்ஸ்ட்ராங் படுகொலை… காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு உத்தரவு!
முதல்வர் ஸ்டாலின் – ஆம்ஸ்டார்ங்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 06 Jul 2024 10:00 AM

”பேரதிர்ச்சியை தருகிறது” தமிழக பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாக கைது செய்திருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Also Read: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. யார் இவர்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை:

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.. தமிழ்நாடு பகுஜன் சமாஜ் மாநில தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இந்நிலையில் நேற்று இரவு சென்னை, பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த நிலையில், உணவு டெலிவரி செய்பவர்களை போல இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரிய வெட்டியது. இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், மீட்டுகப்பட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது கொலை சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று இரவு முதல் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என கூறி அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

Also Read: ”சமரசமின்றி சட்ட ஒழுங்கை நிலை நாட்டிடுக” ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு விஜய் கண்டனம்!

 

 

Latest News