5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. யார் இவர்?

சென்னையை பூர்விகமாக கொண்டவர் ஆம்ஸ்ட்ராங். இவரது தந்தை திராவிட கழகத்தில் முழு நேர ஊழியராக பணியாற்றியவர். இதனால் சிறுவயதில் இருந்தே திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தார் ஆம்ஸ்ட்ராங். பள்ளி காலத்தில் இருந்தே அரசியல் ஆர்வத்துடன் இருந்தார்.  திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார் ஆம்ஸ்ட்ராங். சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2000ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கினார்.

BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. யார் இவர்?
ஆம்ஸ்ட்ராங்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 06 Jul 2024 08:19 AM

ஆம்ஸ்ட்ராக் கொலை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று இரவு சென்னை, பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த நிலையில், உணவு டெலிவரி செய்பவர்களை போல இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரிய வெட்டியது. இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், மீட்டுகப்பட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், இவர் யார்? இவரின் பின்புலம் என்ன என்பதை பார்ப்போம்.

யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

சென்னையை பூர்விகமாக கொண்டவர் ஆம்ஸ்ட்ராங். இவரது தந்தை திராவிட கழகத்தில் முழு நேர ஊழியராக பணியாற்றியவர். இதனால் சிறுவயதில் இருந்தே திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தார் ஆம்ஸ்ட்ராங். பள்ளி காலத்தில் இருந்தே அரசியல் ஆர்வத்துடன் இருந்தார்.  திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார் ஆம்ஸ்ட்ராங். சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2000ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கினார். அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்த அவர், 2006ல் தலித் அமைப்பை தொடங்கினார். 2006ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 99வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஆனார்.

Also Read: நண்பன் ஆம்ஸ்ட்ராங் கொலை.. மருத்துவமனையில் கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித்!

ஆம்ஸ்ட்ராங் கவுன்சிலராக இருந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல் கொடுத்து வந்தார். அதைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த அவர், 2007ஆம் ஆண்டு அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டடார். இதன்பின், பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான ஆதரவைப் பெற்றார். 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டார்.

அவரது வாழ்க்கை முழுவதும், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். சிறுபான்மையினர் பாதுகாப்புக்காகவும், தலித் மக்களின் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங்களை தன் வாழ்கை முழுவதும் நடத்தினார். தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல மாநிலங்களில் பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து மிக ஆழமாகவும் தீவிரமாகவும் பேசக்கூடியவர்.  இந்த நிலையில், நேற்று இரவு இவர் மர்ம நபர்களாக சரமாரியாக கொலை செய்யப்பட்டிருப்பது பகுஜன் சமாஜ் வாதி கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்:

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்றார்.

தொடர்ந்து, பாஜக தலைவர் மாநில தலைவர் கூறுகையில், “நம் சமூகத்தில் வன்மறைக்கும் மிருகத்தனத்துக்கு இடமில்லை. ஆனால், கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு மாநிலத்தின் முதல்வராகக் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று ஸ்டாலின் அவர்கள் தன்னையே கேட்டுக் கொள்ள வேண்டும்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: இன்றைய முக்கியச் செய்திகள்.. ஆம்ஸ்ட்ராங் கொலை முதல் பிரிட்டன் தேர்தல் வரை!

 

Latest News