PM Modi TV9 Interview: இடஒதுக்கீடு என்ற பெயரில் கேரள முஸ்லிம்களுடன் காங்கிரஸ் வாக்கு ஒப்பந்தமா? – பிரதமர் மோடி கேள்வி
PM Modi : முஸ்லிம் வாக்காளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு உடன்பாட்டுக்கு வந்தாரா என்பதை அறிய விரும்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
நாட்டின் மிகப்பெரிய செய்தி நெட்வொர்க்கான டிவி9க்கு பிரதமர் நரேந்திர மோடி பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேட்டி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகியது. டிவி9 குழுமத்தின் ஐந்து நிர்வாக ஆசிரியர்களுடன் பிரதமர் மோடியின் வட்டமேசை நேர்காணலாக இது அமைந்தது
அந்தப்பேட்டியில் இடஒதுக்கீடு குறித்தும் , ராகுல்காந்தி குறித்தும் அவர் பேசினார். அதில், ”எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை முஸ்லிம் சமூகத்தினருக்கும் அளிக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய காங்கிரஸ் விரும்புகிறது என்று வெளிப்படையாகக் கூறினார். இந்த விவகாரத்தில் வயநாடு மக்களவைத் தொகுதியில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு உடன்பாட்டுக்கு வந்தாரா என்பதை அறிய விரும்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
காங்கிரஸுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடஒதுக்கீட்டு வாக்கு ஒப்பந்தம் உள்ளதா? இடஒதுக்கீடு விவகாரத்தில் வயநாட்டு முஸ்லிம்களுக்கும் காங்கிரசுக்கும் இடையே ஏதாவது ஒப்பந்தம் உள்ளதா என்று கேட்க விரும்புவதாக பிரதமர் கூறினார்.