5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

chennai Powercut: சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை மின்தடை.. லிஸ்டில் இருக்கும் ஏரியாக்கள் இதோ!

சென்னை மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

chennai Powercut: சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை மின்தடை.. லிஸ்டில் இருக்கும் ஏரியாக்கள் இதோ!
சென்னையில் மின்தடை
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 Jul 2024 19:24 PM

மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் நாளை (09.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ஆவடி, பொன்னேரி, போரூர், அடையாறு ஆகிய பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.

Also Read: அடுத்த ஒரு வாரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

எந்தெந்த இடங்கள்?

ஆவடியில் திருமுல்லைவாயல், மிட்டனமல்லி, பாரதி நகர், முருகன் கோயில், மோரை, மாதா கோயில், அண்ணாநகர், வீராபுரம், திருமலை நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. வேளச்சேரியில் டான்சி நகர், வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, எல்ஐசி காலனி, டான்சி நகர் 1 முதல் 7வது தெரு, தரமணி இணைப்பு சாலை பகுதி, தண்டீஸ்வரம் 11 மற்றும் 12வது தெரு வரை நாளை நாளை மின்தடை செய்யப்படுகிறது.

போரூர் பகுதியில் லட்சுமி நகர், புது காலனி, பிள்ளையார் கோயில் தெரு, மூர்த்தி அவென்யூ, டிரங்க் ரோடு, லட்சுமி நகர் 40 அடி சாலை, லட்சுமி நகர் அண்ணாசாலை, பரணிபுத்தூர் தெரு, திருமுடிவாக்கம் பகுதி, திருநீர்மலை மெயின் ரோடு, பெருமாள் கோவில் நகர், போலீஸ் குவார்ட்டர்ஸ், சரண்யா நகர், ஏஆர் பாலம், சர்மா நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

அடையாறு பகுதியில் கொட்டிவாக்கம், திருவான்மியூர், 3வது மெயின் ரோடு, 4வது மெயின் ரோடு, காமராஜ் நகர், பிடிசி டிப்போ, திருவள்ளுவர் சாலை, 5வது கிழக்கு தெரு முதல் 24வது கிழக்கு தெரு காமராஜ் நகர் வரை, தெற்கு அவென்யூ, மங்களேரி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. பொன்னேரி: வெள்ளோடை, என்.ஜி.ஓ.நகர், சின்னகாவனம், பெரியகாவனம், லட்சுமிபுரம், பாலாஜி நகர், டி.வி.பாடி, பரிக்கப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி, தடப்பெரும்பாக்கம், அனுப்பம்பட்டு, ஆலோடு, வெம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

மதுரவாயல் பகுதியில் அக்ரோலா, பி.எச்.ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, வரலட்சுமி நகர், அபிராமி நகர், மவுண்ட் பிரிக்ஸ், விவேகானந்தா தெரு, சாமியாபுரம் மெயின் ரோடு, மேட்டுக்குப்பம் மெயின் ரோடு, அன்னை தெரு, தர்மராஜா கோயில் தெரு, காமதேனு நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும்.

Also Read: சென்னையில் ஒரே டிக்கெட் முறை.. எப்போது அறிமுகம்? வந்தது முக்கிய அறிவிப்பு!

Latest News