8ஆம் தேதி பிரதமராக பதவியேற்கும் மோடி? சந்திரபாபு, நிதிஷ் ஓகே சொல்வார்களா?
வரும் ஜூன் 8ஆம் தேதி மாலை மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், தொடர்ந்து மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு சாதனையை மோடி சமன் செய்ய உள்ளார். இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவையை கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரை கடிதத்தையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்திருக்கிறார்.
பிரதமராக பதவியேற்கும் மோடி: உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவது ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பாஜக கூட்டணி 292 இடங்களிலும், பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜகவின் பெருந்தலைகள் கூறி வந்த நிலையில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அவர்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. தெலுங்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
ஏனென்றால் பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 6 இடங்களிலும் வென்றன. எனவே, இவர்களின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும் என்பதால், இன்று மாலை என்டிஏ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் பங்கேற்பார்கள். இதன்பிறகு, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் இருக்க சம்மதம் தெரிவித்தார்களா இல்லையா என்பது தெரியவரும்.
Also Read: சபாநாயகர் பதவிக்கு போட்டா போட்டி.. விழிபிதுங்கும் பாஜக!
அடுத்து என்ன?
இந்த நிலையில், வரும் ஜூன் 8ஆம் தேதி மாலை மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், தொடர்ந்து மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சாதனையை பிரதமர் மோடி சமன் செய்ய உள்ளார். இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவைய கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார்.
Also Read: பாஜகவா, I.N.D.I.A-வா? சந்திரபாபு நாயுடு அளித்த பரபரப்பு பதில்!