கார்த்திகை தீபம் சீரியலில் நடு காட்டுக்குள் நடக்க போகும் பரிகாரம்!
Karthigai Deepam serial update: நடு காட்டுக்குள் நடக்க போகும் பரிகாரம், மோசமடையும் அபிராமியின் உடல்நிலை என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்.
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் போட்டோகிராபரை சந்திக்க சென்றபோது ரியாவை பிடிக்க முயற்சி செய்தேன் கடைசியில் முடியாமல் போகிறது. மறுபக்கம் ரம்யா தீபாவிடம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம் என்று சொல்லி நல்லா இருந்தா சொல்லு போட தீபா நீ என்ன பேசுற? அத்தைக்காக நான் கண்டிப்பா இதை செஞ்சு தான் ஆகணும் என்று சொல்கிறாள். உனக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பதில் சொல்றது என்று ரம்யா கேட்க உடனே தீபா போனை எடுத்து இந்த பரிகாரத்தை நான் விருப்பப்பட்டு தான் செய்கிறேன் இதுல எனக்கு எந்த பிரச்சினையை ஏற்பட்டாலும் அதற்கு நாம் மட்டுமே பொறுப்பு என்று பேச ரம்யா நம்ப ரூட்டு கிளியர் என சந்தோஷப்படுகிறாள். அடுத்ததாக ஐஸ்வர்யா ரூமில் இருக்க அருண் அவளை எழுந்து சென்று முகத்தை கிளம்பி வர சொல்ல ஐஸ்வர்யா சென்றதும் தலையணை கீழே அச்சு வைத்த சோப்பு இருப்பதை பார்த்து சந்தேகப்படுகிறான்.
இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அபிராமியின் உடல்நிலை மோசமாகி விட அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்குவதாக டாக்டர்கள் அதிர்ச்சி கொடுக்கின்றனர். இதனால் குடும்பத்தினர் எல்லோரும் கவலையடைகின்றனர். மறுபக்கம் தீபாவை தீர்த்து கட்ட ரம்யா ஏற்பாடு செய்திருந்த போலி சாமியார் பரிகாரம் செய்வதை பற்றி சொல்லி இந்த நிலையில் நடு காட்டுக்குள் ஓடும் ஆற்றில் இதற்கான பரிகாரத்தை செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்து உள்ளது.
Also read… Home Tour : எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா? வீடியோ இதோ!
தீபா போலி சாமியார் சொன்னதையும் ரம்யாவின் நாடகத்தையும் உண்மை என நம்பி பரிகாரம் செய்ய வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
Also read… ”மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார் அமலா பால்” – மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு!