5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

3 நாளில் ஹிப் ஹாப் ஆதியின் ‘பிடி சார்’ படம் வசூலித்தது இத்தனை கோடிகளா?

PT Sir Collection Update: மீசையை முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு, வீரன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ஏழாவது படமாக பிடி சார் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக  ஐசரி கணேசன் தயாரித்துள்ளார்.

3 நாளில் ஹிப் ஹாப் ஆதியின் ‘பிடி சார்’ படம் வசூலித்தது இத்தனை கோடிகளா?
‘பிடி சார்’ படம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 27 May 2024 12:19 PM

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிடி சார்’. இந்தப் படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி ஆதி நாயகனாக நடித்துள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த காஷ்மீரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும், அனிகா சுரேந்திரன், பிரபு, முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி அதற்குள் 25 படங்களுக்கு இசையமைத்து விட்டார். அவரது இசையில் 25வது படமாக உருவாகியுள்ள ‘பிடி சார்’ திரைப்படம் கடந்த 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மீசையை முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு, வீரன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ஏழாவது படமாக பிடி சார் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக  ஐசரி கணேசன் தயாரித்துள்ளார்.

மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில் பிடி வாத்தியாராக பணிபுரிந்து வருகிறார் ஹிப்ஹாப் ஆதி.  சிறுவயதில் இருந்தே அவரது அம்மா தேவதர்ஷினி ஹிப்ஹாப் ஆதியை எந்த ஒரு பிரச்சனைக்கும் போகவிடாமல் பத்திரமாக பார்த்து வருகிறார்.  அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருக்கிறார்.  இந்த சமயத்தில் அவரது எதிர் வீட்டில் குடியிருக்கும் அனிகா சுரேந்திரன் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். இதற்குக் காரணம் அவர் வேலை பார்க்கும் கல்வி நிறுவனத்தின் முதலாளி தியாகராஜன் என்று தெரிய வருகிறது.  இதன் பின்பு என்ன ஆனது? அனிகாவின் மரணத்திற்கு உண்மையில் யார் காரணம்? என்பதே பிடிசார் படத்தின் கதை.

Also read… கொக்கிகுமாரும்.. புதுப்பேட்டை படமும்… தனுஷ் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தைகள்!

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பிடி சார் திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளது. முதல் இரண்டு நாட்களில் ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்த நிலையில், 3வது நாளில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News