‘கேஜிஎஃப் – 3’ வருமா? – பிரசாந்த் நீல் சொன்னது இதுதான்!
KGF 3 Update: கன்னடம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் தரமான சம்பவம் செய்தது கேஜிஎஃப் திரைப்படம். முதல் இரண்டு பாகங்களுக்கும் அதிக வரவேற்பு இருந்ததால், மூன்றாம் பாகம் உருவாகுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், பிரசாந்த் நீல் அடுத்ததாக சலார் படத்தை இயக்க சென்றுவிட்டார்.
‘கேஜிஎஃப் – 3’ படம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கன்னட திரையுலகம் என்றாலே பிறமொழி படங்களை ரீமேக் செய்வார்கள் என்கிற பிம்பம் இருந்த நிலையில், அதையெல்லாம் தகர்த்தெறிந்து தங்களிடமும் தரமான கதையம்சம் கொண்ட படங்கள் இருக்கிறது என்பதை உலகறிய செய்த திரைப்படம் தான் கேஜிஎப். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இப்படத்தில் ராக்கி பாய் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் நடிகர் யாஷ். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்தின் அதிரடியான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை வேற லெவல் மாஸாக எடுத்து பான் இந்தியாவையே அதிரவிட்டார் இயக்குநர் பிரசாந்த் நீல்.
கடந்த 2022-ம் ஆண்டு வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்தது. கேஜிஎஃப் 2 திரைப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ், ஈஸ்வரி ராவ் மற்றும் சரண் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இதில் யாஷின் சிறுவயது கதாப்பாத்திரத்தில் அன்மோல் விஜய் பட்கல் என்ற சிறுவன் நடித்திருந்தான்.
Also read… Indian 2: இந்தியன் 2… சென்சார் போர்டு மாற்றச் சொன்ன 5 விசயங்கள்!
கன்னடம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் தரமான சம்பவம் செய்தது கேஜிஎஃப் திரைப்படம். முதல் இரண்டு பாகங்களுக்கும் அதிக வரவேற்பு இருந்ததால், மூன்றாம் பாகம் உருவாகுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், பிரசாந்த் நீல் அடுத்ததாக சலார் படத்தை இயக்க சென்றுவிட்டார்.
இரண்டாம் பாகத்தின் முடிவில் யாஷ் இறந்துபோவது போல் காட்டியிருந்தாலும், கே.ஜி.எப் மூன்றாம் பாகத்திற்காக லீட் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில், இயக்குனர் பிரஷாந்த் நீல் இப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அதில், கேஜிஎஃப் மூன்றாம் பாகம் உருவாவது உறுதி. அதற்கான கதையும் ரெடியாகிவிட்டது. அப்படி மூன்றாம் பாகம் நடக்கவில்லை என்றால் கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் இறுதியில் 3ஆம் பாகம் குறித்து காட்சியை வைத்திருக்க மாட்டோம். அனைத்தையும் திட்டமிட்டு கே.ஜி.எப் 3 படப்பிடிப்பு துவங்கும் என அவர் கூறியுள்ளார்.