5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நாகர்ஜூனாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தனுஷ்… வைரலாகும் வீடியோ!

Dhanush: குபேரா படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள செல்வதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனுஷ், நாகார்ஜுனா உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு சென்றனர். அப்போது விமான நிலையத்தில் பணி செய்யும் முதியவர் ஒருவர் நாகார்ஜுனாவின் அருகில் சென்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் அந்த முதியவரை முரட்டுத்தனமாக இழுத்ததில் அந்த முதியவர் கீழே விழ செல்கிறார். அதை கண்டும் காணத மாதிரியே நாகர்ஜுனா மற்றும் தனுஷ் செல்கின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நாகார்ஜுனா தனது சமூகவலைதளப் பக்கத்தில் மன்னிப்பு கோரினார்.

நாகர்ஜூனாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தனுஷ்… வைரலாகும் வீடியோ!
தனுஷ்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Jun 2024 11:01 AM

ஏர்போர்ட்டில் தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்த முதியவரை பாதுகாவலர் தள்ளிவிட்டதற்கு நடிகர் நாகர்ஜூனா மன்னிப்பு கோரிய நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷை பார்க்க வந்த ரசிகரை பாதுகாவலர் தள்ளிவிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நீண்ட காலங்கள் அவர் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் ராயன் படத்தின் மூலம் தனது இயக்குநர் வேலையை தொடங்கியுள்ளார் தனுஷ்.

அதனைத் தொடர்ந்து தனுஷின் 51-வது படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’ ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது. இதில் தனுஷின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.  இந்தப் படத்திற்கு  ’குபேரா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் தாடியும், தம்பட்டையுமாக பிச்சைக்காரர் போல் இருந்தார். தனுஷின் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை கிளப்ப ஆரம்பித்தனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைப்பெறவுள்ளது. அதில் நாகர்ஜுனா மற்றும் தனுஷ் இடையிலான சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குபேரா படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள செல்வதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனுஷ், நாகார்ஜுனா உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு சென்றனர். அப்போது விமான நிலையத்தில் பணி செய்யும் முதியவர் ஒருவர் நாகார்ஜுனாவின் அருகில் சென்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் அந்த முதியவரை முரட்டுத்தனமாக இழுத்ததில் அந்த முதியவர் கீழே விழ செல்கிறார். அதை கண்டும் காணத மாதிரியே நாகர்ஜுனா மற்றும் தனுஷ் செல்கின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நாகார்ஜுனா தனது சமூகவலைதளப் பக்கத்தில் மன்னிப்பு கோரினார்.

 

View this post on Instagram

 

A post shared by Snehkumar Zala (@snehzala)

நாகர்ஜூனாவின் வைரல் வீடியோவைத் தொடர்ந்து தனுஷும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி நேற்று ஜுஹு பீச்சில் ஷூட்டிங்கிற்காக வந்திருந்தார். அவர் நடந்து வரும்போது ரசிகர்கள் சிலர் போனில் அவரை போட்டோ எடுக்க முற்பட்டு இருக்கின்றனர். அவர்களை தனுஷின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டதாக வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. நெட்டிசன்களும் தனுஷை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

Latest News