5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நடிகை மமிதா பைஜுவை காணக் குவிந்த ரசிகர்கள்… கூட்டத்தில் சிக்கி கடுப்பான நடிகை!

Mamitha Baiju : ஒரே படத்தின் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற மமிதா பைஜுவுக்கு ரசிகர்கள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த சென்னையில் அண்மையில் மால் ஒன்றின் திறப்பு விழாவுக்கு நடிகை மமிதா பைஜுவை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

நடிகை மமிதா பைஜுவை காணக் குவிந்த ரசிகர்கள்… கூட்டத்தில் சிக்கி கடுப்பான நடிகை!
நடிகை மமிதா பைஜு
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jun 2024 15:26 PM

மலையாளத்தில் உருவான பிரேமலு படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பான் இந்தியா அளவின் பிரபலம் ஆன நடிகை மமிதா பைஜு சென்னையில் ரசிகர்கள் மத்தியில் சிக்கியபோது எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் ‘தண்ணீர் மத்தான் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பிரமேலு’. நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு நடித்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். மேத்யூ தாமஸ், ஷ்யாம் புஸ்கரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் ‘பிரேமலு’. காதல், காமெடி நிறைந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

உலக அளவில் ரூ.130 கோடி வரை வசூலித்தது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டூடியோஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்தது.

Also read… ஐஸ்வர்யா ராயின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு இதுதான் காரணமா?

இந்த படத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் அறியப்படும் நாயகியாக மமிதா பைஜு உருவானார். இதனைத் தொடர்ந்து கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நடிக்க நடிகை மமிதாவிற்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

இப்படி ஒரே படத்தின் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற மமிதா பைஜுவுக்கு ரசிகர்கள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த சென்னையில் அண்மையில் மால் ஒன்றின் திறப்பு விழாவுக்கு நடிகை மமிதா பைஜுவை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டு நடிகை மமிதா பைஜூ அந்த கூட்டத்தில் சிக்கியுள்ளார்.  பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் பவுன்சர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தி, நடிகை மமிதா பைஜுவை பத்திரமாக அழைத்து சென்றனர்.  அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News